ஹைதி படகு விபத்து - 50 பேர் பலி

October 26, 2024

ஹைதி படகு விபத்தில் 50 பேர் பலியாகினர். கரீபியன் தீவு நாடான ஹைதியில் 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டில் அரசியல் நிலைமை மோசமாகவும், ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரிக்கவும் ஆரம்பித்தது. ஆயுத கும்பலின் வன்முறை அதிகரித்ததில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உட்பட பல இடங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அர்காஹே நகரத்தின் கடற்கரையில் ஆயுத கும்பல் ஒரு படகில் சென்று, அருகிலுள்ள நகரங்களில் தாக்குதல் நடத்த வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். […]

ஹைதி படகு விபத்தில் 50 பேர் பலியாகினர்.

கரீபியன் தீவு நாடான ஹைதியில் 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டில் அரசியல் நிலைமை மோசமாகவும், ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரிக்கவும் ஆரம்பித்தது. ஆயுத கும்பலின் வன்முறை அதிகரித்ததில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உட்பட பல இடங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அர்காஹே நகரத்தின் கடற்கரையில் ஆயுத கும்பல் ஒரு படகில் சென்று, அருகிலுள்ள நகரங்களில் தாக்குதல் நடத்த வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும், அவர்கள் உடனே அங்கு சென்றனர். அந்த கும்பலுக்கு எதிரான தாக்குதல் நடத்தினர். அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது, அந்த படகு அருகிலுள்ள ஒரு பாறை மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu