அத்திப்பட்டு அனல் மின் நிலையம் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி,தூத்துக்குடி ஆகிய பல இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிதாக அனல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது 6500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட மிகப்பெரியது. இந்த அனல் மின் நிலையத்திற்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டுவரப்பட உள்ளது. இது அடுத்த மாதம் ஜனவரி முதல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.