ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இத்தாலியின் துரின் நகரில் நடைபெறும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், உலகின் நம்பர் 1 வீரர் சின்னர், நம்பர் 4 வீரர் ரஷியாவின் டேனில் மெத்வதேவிடம் வெற்றி பெற்றார். சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார். இதன் மூலம் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இந்த அரையிறுதி போட்டி 17-ம் தேதி நடக்கிறது.