ஆப்பிரிக்காவில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடைபெற்றதில் 40 வீரர்கள் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த அதிரடி தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளிகள் தப்பியோடினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அதிபர் இட்ரிக் டெபி அந்த முகாமை பார்வையிட்டு, கொலையாளிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.