ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள உக்ரைன் நாட்டு பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
டோனட்ஸ்க்புகர் சந்தை பகுதியில் கொத்து வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால் பொதுமக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். உக்ரைன் ராணுவத்தினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், உக்ரைன் தரப்பில், இந்த தாக்குதல் குறித்த எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் தீவிர ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், உஸ்த் லூக்கா துறைமுகப் பகுதியில் எரிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.