இந்தியாவிற்கு வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்திருந்தது.
அரபிக்கடலில் லிபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி கேம்புளூட்டோ மீது கடந்த 23ஆம் தேதி ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க தலைமையகம் ஆன பென்டகன் 24ஆம் தேதி தெரிவித்திருந்தது. இதேபோன்று காபோன் நாட்டுக்கு சொந்தமான எம்.வி கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அரபிக் கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது
இந்த சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இருந்த ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் அரபிக்கடல் பகுதிகளில் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.














