டெல்லி ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் தமிழக மாணவகள் மீது தாக்குதலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் மீது மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு அவர்கள் வைத்திருந்த பெரியாரின் படத்தையும் சிதைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. மாணவர்களுக்கு எனது ஒற்றுமையை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக மாணவர்களை பாதுகாக்கவும் கல்லூரி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.