மியான்மர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு அரசு ரகசியச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. பின்னர் தேர்தலில் மோசடி நடந்ததாக ௯றி அவர் மீது அரசு விசாரணை நடத்தியது. அதில் குற்றம் நி௫பிக்கப்பட்டு ஜுண்டா நீதிமன்றம், சூகி மற்றும் ஆஸ்திரேலிய சீன் டர்னெல் ஆகியோருக்கு அரசு ரகசிய சட்டத்தின் கீழ் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சிறை தண்டனையை அணுபவிக்க நேரிடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.