ஆஸ்திரேலியா சீனா இடையே முதல் உயர்மட்ட உரையாடல் தொடக்கம்

September 7, 2023

கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக, ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாடுகள் தங்கள் உயர்மட்ட உரையாடலை தொடங்கியுள்ளன. இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர். மனித உரிமைகள், கொரோனா பரவல் தொடங்கி, வர்த்தகம் வரையில், இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்துரையாடினர். கடந்த 3 ஆண்டுகள் இடைவெளியில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் பல்வேறு கூட்டணிகளில் இணைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது, சீனா, ஆஸ்திரேலியா உடனான மோதல்களை தள்ளி வைத்து இந்த சந்திப்பில் […]

கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக, ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாடுகள் தங்கள் உயர்மட்ட உரையாடலை தொடங்கியுள்ளன. இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர். மனித உரிமைகள், கொரோனா பரவல் தொடங்கி, வர்த்தகம் வரையில், இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்துரையாடினர்.

கடந்த 3 ஆண்டுகள் இடைவெளியில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் பல்வேறு கூட்டணிகளில் இணைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது, சீனா, ஆஸ்திரேலியா உடனான மோதல்களை தள்ளி வைத்து இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனத் தலைநகர் பீஜங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு அமைச்சர்களும் இது தொடர்பாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இதன் விளைவாக பல்வேறு கூட்டு திட்டங்கள் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu