அலுவலக நேரம் நிறைவடைந்த பிறகு அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை ஏற்க தேவை இல்லை என்ற புதிய சட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் நலன் சார்ந்த முக்கியம் வாய்ந்த அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலுக்கு பிறகு அலுவலக நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்து பணி செய்யும் சூழல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியாளர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஊழியர்களின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவின் ஆளும் இடதுசாரி தொழிலாளர் கட்சி இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அத்துடன், இந்த புதிய சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு 93900 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.