ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்றன. இதில், ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதினர். போபண்ணா-ஜாங் ஜோடி முதல் செட்டை 6-2 என்ற எண்ணிக்கையால் வென்றாலும், அடுத்த இரு செட்களில் 4-6, 9-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினர்.













