ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் ஸ்வரேவ் மற்றும் படோசா காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்று மெல்பொர்னில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட்-வுடன் மோதினார். ஆரம்பத்தில் 6-1 என வெற்றி பெற்ற ஸ்வரேவ், இரண்டாவது செட்டில் 2-6 என தோற்றார். ஆனால் அடுத்த இரண்டு செட்களில் 6-3, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பவுலா படோசா 6-1, 7-6 (7-2) என செர்பியாவின் ஒல்காவை வென்று காலிறுதியில் இடம் பிடித்தார்.