சென்னை தீவு திடலில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் தொழிலாளர் நல சங்க வாரியத்தில் பதிவு செய்த பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கப்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்த 500 பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ, தொழில் முறை டாக்ஸி வாகனம் வழங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.