கேரளாவில் பறவை காய்ச்சல் - 8,000 பறவைகளை கொல்ல முடிவு

December 15, 2022

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் 8,000 பறவைகளை கொல்ல அரசு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் வந்தது. கடந்த சில தினங்களாக கோட்டயம் மாவட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஏராளமான வாத்துகள் திடீரென […]

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் 8,000 பறவைகளை கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் வந்தது. கடந்த சில தினங்களாக கோட்டயம் மாவட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஏராளமான வாத்துகள் திடீரென இறந்தன. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நேற்று கோட்டயம் மாவட்ட கலெக்டர் ஜெய ஸ்ரீ தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நோய் பரவிய பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்பட 8 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும் 1 கிமீ சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu