சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி

September 26, 2022

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இம்மாத உரையில் பேசிய அவர், சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் […]

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இம்மாத உரையில் பேசிய அவர், சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் இந்தியா பல உயரங்களை எட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அவர்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், உடல்தகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பலரும் உழைக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்

அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம். பருவ நிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu