இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் மேலநீலிதநல்லூர் தமிழ் பேராசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் பன்னாட்டு தமிழாய்வு மாநாடு நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் உள்ள ப.மு. தேவர் கல்லூரி பேராசிரியர் ஹரிஹரன் கலந்து கொண்டு சமூக அரசியல் நோக்கில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கவிதைகள், தமிழர் பண்பாடும் செந்நெறிகளும், பழமொழிகளில் பண்பாட்டு பதிவுகள், காலந்தோறும் தமிழர் கலைகள் போன்ற ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார். இதற்காக அவர் பைந்தமிழ் பாவலர், சுவாமி விபுலானந்த அடிகள் போன்ற விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்