அயோத்தி ராமர் கோவிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி

January 23, 2024

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். இதில் நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக செல்ல […]

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். இதில் நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கியுள்ளனர்.மேலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு காலை 7 மணி முதல் 11 மணி வரைக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 7:00 மணி வரைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu