‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டமாகும்.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம், இந்திய அரசின் சமூக நலத்திட்டமாக 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக பின்வாங்கிய குடும்பங்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடிகிறது.
சிறந்த மருத்துவ சிகிச்சைகள், குறிப்பாக அறுவை சிகிச்சைகளுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவுகின்றது. மேலும், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த மருத்துவ காப்பீடு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எந்த பொருளாதார வரம்பும் பொருந்தாமல் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடந்த 29-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். மூத்த குடிமக்கள், அந்தந்த ஆதார் அடிப்படையில் இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும்.இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் www.beneficiary.nha.gov.in என்ற இணையதளத்தில் அல்லது ‘ஆயுஷ்மான்’ என்ற செயலியில் விரிவாக தரப்பட்டுள்ளது.
எனவே, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டைக்கு தொடர்புடைய விவரங்களை பதிவேற்றம் செய்தால், அவர்கள் உடனடியாக மருத்துவ காப்பீடு அட்டை பெற்று பயன்படுத்த முடியும்.