கஜகஸ்தானில் விமானம் நிலை தவறி விழுந்து வெடித்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர்.
அசர்பைஜானின் பாகு நகரிலிருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட 67 பயணிகள் கொண்ட விமானம், கஜகஸ்தானின் வான்பரப்பில் பனிமூட்டத்தால் பிரச்சினைகளில் சிக்கியது. விமானி, அக்டாவ் நகரில் அவசரமாக தரையிறக்க முயற்சித்தபோது, பறவைகள் விமானத்துடன் மோதின. அதன் பிறகு, விமானம் வேகமாக தரையிறக்க முயற்சிக்கபட்டபோது, திடீரென விமானம் நிலை தவறி விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.