அண்டை நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா இடையே, போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே, இது குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்துள்ளது.
அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா இடையே, பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், அஜர்பைஜானின் நகோர்னோ கராபக் பிராந்தியம், 1994 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பிறகு, ஆர்மேனியாவின் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியுடனான சாலைப் போக்குவரத்தை அஜர்பைஜான் முடக்கியுள்ளது. இது தொடர்பான மோதல் அதிகரித்த நிலையில், இரு நாடுகளும் அந்தப் பகுதியில் தங்கள் படைகளை குவித்துள்ளன. கடந்த 2020ல், சுமார் 6 வாரங்களுக்கு இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் சண்டையிட்டன. இதில் 6600 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எனவே, இது போன்ற சூழல் தற்போது மீண்டும் எழக்கூடாது என்பதற்காக, ஐநா அவசர கூட்டத்தை நடத்துகிறது.