தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி. எட் சிறப்பு கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜனவரி 20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் யுஜிசி, இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரத்துடன் பி.எட் கல்வி பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. இந்த பிஎட் (பொது) பட்டத்திற்கு இணையானது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.இப்படிப்பினை முடித்தவர்கள் பொது மற்றும் சிறப்பு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்சி ஆகியவற்றில் ஆசிரியர்களாக பணிபுரியலாம். தற்போது 2024- ஆம் ஆண்டிற்கான பிஎட் சிறப்பு கல்வி பட்ட படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பம் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படிப்பில் சேர விரும்புவோர் ஜனவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.