ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் ஆன சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வலது கண்ணில் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நிபந்தனை ஏற்பட்டதால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 59 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவிற்கு நான்கு வார காலத்திற்கு ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.