சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு இயக்குனரகம் (DGGI), பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், ₹341 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டி ஷோ கேஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 2022 முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், ஒரு சேவைக் கட்டணத்தை வரியற்ற வட்டி என தவறாக வகைப்படுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ₹341 கோடி அபராதம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. மேலும், ₹150 கோடி வட்டி மற்றும் தினசரி கட்டணமாக ₹16 லட்சம் என மொத்தம் ₹850 கோடி தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பஜாஜ் பைனான்ஸ் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. வரும் நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.