பாக்முத் நகரம் ஜூன் மாதம் ஒப்படைப்பு

May 23, 2023

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பாக்முத் நகரில், ரஷ்யாவின் தனியார் ராணுவ படை வாக்னர், போரில் ஈடுபட்டு வந்தது. தற்போது, ஜூன் ஒன்றாம் தேதி, பாக்முத் நகரை ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் யேவ்கெனி பிரிகோஷின் அறிவித்துள்ளார். டெலிகிராம் ஊடகத் தளத்தில், ஆடியோ பதிவு மூலம் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு வெளியிட்ட செய்தியின் படி, மே 25ஆம் தேதி முதல் ஆர்டெமோவ்ஸ்க் நகரின் கட்டுப்பாட்டை ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணி […]

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பாக்முத் நகரில், ரஷ்யாவின் தனியார் ராணுவ படை வாக்னர், போரில் ஈடுபட்டு வந்தது. தற்போது, ஜூன் ஒன்றாம் தேதி, பாக்முத் நகரை ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் யேவ்கெனி பிரிகோஷின் அறிவித்துள்ளார். டெலிகிராம் ஊடகத் தளத்தில், ஆடியோ பதிவு மூலம் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு வெளியிட்ட செய்தியின் படி, மே 25ஆம் தேதி முதல் ஆர்டெமோவ்ஸ்க் நகரின் கட்டுப்பாட்டை ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணி தொடங்க உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி, ரஷ்ய ராணுவத்திடம் முழு கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டு, வாக்னர் குழு வெளியேறும்.

உக்ரைனில் உள்ள பாக்முத் நகரம், முன்னதாக ஆர்டெமோவ்ஸ்க் என்று அழைக்கப்பட்டது. கம்யூனிச புரட்சியாளர் ஒருவரின் நினைவாக ரஷ்யா இந்த பெயரை சூட்டி இருந்தது. உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, பாக்முத் என்று நகரின் பெயர் மாற்றப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யா இந்த நகரை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், உக்ரைன் மீண்டும் மீண்டும் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நகரின் பகுதியில் உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், பாக்முத் நகரம் கையகப்படுத்தப்பட்டது போரின் வெற்றியை நோக்கி ரஷ்யா முன்னேறுவதை குறிப்பதாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu