நியாய விலை கடைகளில் மே மாதம் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் மே மாத பொருள்களை பெற முடியாதவர்களின் வசதிக்காக ஜூன் முதல் வாரம் வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது