தமிழகத்தில் ராட்வீலர், டெரியர், ரோடீசியன் ரிட்ஜ்பாக் உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராட்வீலர் வகையைச் சேர்ந்த நாய் ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை கடித்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ராட்வீலர், டெரியர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதில் கலப்பினங்கள் இறக்குமதி, இனப்பெருக்கம் செய்வதற்கும் வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகை நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் உரிய உரிமத்தை பெற வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.