தமிழகத்தில் 48 முதுநிலை கோயில்களில் அலைபேசி பயன்பாடு தடை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோயில்களில் அலைபேசி பயன்பாடு தடை குறித்த நீதிமன்ற உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் 48 முதுநிலை கோயில்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் திருச்செந்துாரில் அலைபேசிகளுக்கு டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளோம். கடவுளை தரிசிக்க செல்வோர் அலைபேசி இல்லாமல் சென்றால் நிம்மதி தரும் என்பதால் இத்திட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். மேலும் தமிழகத்தில் 48 முதுநிலை கோயில்களில் அலைபேசி பயன்பாடு தடை செய்யப்பட உள்ளது என்று கூறினார்.