நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை - சென்னை மாநகராட்சி 

April 18, 2023

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு பகுதியில் மை லேடி பூங்காவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஒப்பந்ததாரரிடம் வழங்கியுள்ளது. அண்மையில் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சியாளர்கள் கவனக்குறைவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி (நீச்சல் குளம் […]

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு பகுதியில் மை லேடி பூங்காவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஒப்பந்ததாரரிடம் வழங்கியுள்ளது. அண்மையில் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சியாளர்கள் கவனக்குறைவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி (நீச்சல் குளம் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) விதிகளில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீச்சல் குளத்தில் குளிக்க தடை விதித்து இருந்தது. இந்நிலையில் தற்போது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும் குழந்தைகள் குளிக்கும்போது, பெற்றோர் உடனிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளை உடன்அழைத்து வரக்கூடாது. சிசிடிவிகேமரா பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu