கர்நாடக அரசு சிக்கன் கபாப், மீன் வறுவல் ஆகிய எண்ணெயில் பொறிக்கும் உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடிகளுக்கு தடை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் மீன் வறுவல், சிக்கன் துண்டுகள், சிக்கன் கபாப் உள்ளிட்ட எண்ணெய்களில் பொறிக்கப்படும் பொருள்களில் பயன்படுத்தப்படும் வண்ணக் பொடியின் காரணமாக உடல் நலக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. அதனை அடுத்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறையினர் பொறிக்கும் மீன் வகைகளில் 36 மாதிரிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் சமையலில் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடியில் சன்செட் எல்லோ, கார்மோசின் ஆகிய உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்து உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனால் புற்றுநோய் ஏற்படும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் சிக்கன் கபாப், மீன் வறுவல் போன்ற எண்ணெயில் தயாரிக்கப்படும் பொருள்களில் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடிகளுக்கு தடைவிதித்து கர்நாடகா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி தடை செய்யப்பட்டுள்ள பொடிகளை பயன்படுத்தினால் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.