ரயில்களில் பட்டாசுக்கு தடை: மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

September 23, 2022

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணியர், பட்டாசுகளை எடுத்துச் செல்வர். இதை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்து வருகிறது. […]

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணியர், பட்டாசுகளை எடுத்துச் செல்வர். இதை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்து வருகிறது. விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக பிடிப்பட்டால் 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.

தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில் அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன் பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu