உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் மிகவும் ரசித்து வருகின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கேமரா, ட்ரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வருகின்றார்கள். மேலும் திருமணம் ஆன தம்பதிகள், திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடிகள் ஆகியோர் போட்டோஷூட் நடத்தி வருகிறார்கள். இவை தவிர அங்கு உள்ள புராதன சின்னங்களை அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாட்டுகளை மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்திற்கு முன் போட்டோ சூட் எடுத்தல், விஐபி,
விவிஐபி வாகனங்கள் மற்றும் அனுமதிக்கப்படுகின்றன. இதில் பொது விளம்பரம் செய்வது, டிரோன் கேமரா பறப்பது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.