ஜேஎம் பைனான்சியல் கடன் சேவைகளுக்கு தடை

ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் வழங்கி வந்த பங்குகளுக்கு எதிராக கடன் சேவையை நிறுத்த ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களிலும், பல உலக நாடுகளிலும் இயங்கி வரும் நிதி சேவை நிறுவனம் ஜேஎம் பைனான்சியல் லிமிடெட் மும்பையை தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் மகேந்திரா கம்பானி மற்றும் நிமேஷ் கம்பானி என்பவரால் 1973-ல் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் 1991 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து 2006ல் தேசிய பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. இதுவரை […]

ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் வழங்கி வந்த பங்குகளுக்கு எதிராக கடன் சேவையை நிறுத்த ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பல நகரங்களிலும், பல உலக நாடுகளிலும் இயங்கி வரும் நிதி சேவை நிறுவனம் ஜேஎம் பைனான்சியல் லிமிடெட் மும்பையை தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் மகேந்திரா கம்பானி மற்றும் நிமேஷ் கம்பானி என்பவரால் 1973-ல் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் 1991 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து 2006ல் தேசிய பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. இதுவரை 2022 மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 37 பில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்பிஐ ஜேஎம் பைனான்ஸ் நிறுவனம் ஆர்பிஐ விதிமுறைகளை மீறி கடன் வழங்குபவராகவும், கடனை பெறுபவராகவும் இந்நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஜே எம் பைனான்ஸ் நிறுவனம் வழங்கி வந்த பங்குகளுக்கு எதிரான கடன் சேவையை தடை செய்துள்ளது. பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் அறிவுறுத்தலின்படி ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் குளறுபடிகள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆர்பிஐ தொடங்கியுள்ள தணிக்கை நடவடிக்கை நிறைவடைந்ததும் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவது குறித்து உத்தரவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu