மத்திய அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது. இந்த தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது மீண்டும் இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது














