வெங்காய விலை உயர்வால் வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வண்ணம் 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் பிற நாடுகளில் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காய ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.