புதுச்சேரியில் தொழிற்சாலைகளிலும் பிளாஸ்டிக்கு தடை விதித்து மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனையடுத்து தொழிற்சாலைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலையாக இருக்க பின்பற்ற வேண்டிய நிலையான செயலாக்க நடைமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.
அதில், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களைத் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலையின் நுழைவாயிலில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். தொழிற்சாலைகள் ஏற்பாடு செய்யும் கூட்டம் மற்றும் விழாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும். அதற்கு பதிலான மாற்று பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.