பெங்களூரில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு பெங்களூரில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் 179 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உள்ளிட்ட 185 பேர் பயணித்தனர். அப்போது விமானத்தில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து விமானம் அவசரமாக பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்