இன்று முதல் பெங்களூரில் விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் விமான சேவை தொடங்கியுள்ளது.
பெங்களூர் மாவட்டம் தேவனஹள்ளியில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு பொதுமக்கள் போக்குவரத்து அதிகரிப்பால் ரூபாய் 5000 கோடி செலவில் இரண்டாவது மையம் கட்டப்பட்டது. இந்த முனையதிற்கு பூங்கா முனையம் என்ற பெயரிடப்பட்டு அது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
முதல் முனையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மற்றும் சில உள்நாட்டு விமானங்களை இரண்டாவது முனையத்தில் இருந்து இயக்க முடிவு எடுக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கப்படும் என்ற நிலையில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்பு இன்று இரண்டாவது முனையம் தொடங்கும் பணியை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதில் திட்டமிட்டபடி விமான சேவை இன்று காலை 10:45 முதல் தொடங்கப்பட உள்ளது.