வங்கதேசத்தில் அதானி குழுமம் உட்பட பல நிறுவனங்களுடன் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா செய்து கொண்ட மின்சார ஒப்பந்தங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இடைக்கால அரசு அமைத்த குழு, இந்த ஒப்பந்தங்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை எனக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, இந்த ஒப்பந்தங்களில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வது குறித்து வங்கதேச அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அண்மையில் அமெரிக்க ஆணையத்தின் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட அதானி குழுமத்துக்கு இது மற்றொரு பின்னடைவாக அமைகிறது. மேலும், அதானி குழுமத்தின் நியாயமான நடவடிக்கைகள் குறித்த கேள்வியை வலுப்படுத்துகிறது.