வங்காளதேச ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜியாவுல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வங்காளதேச ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜியாவுல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேஜர் ஜெனரல் ரிப்வானூர் ரகுமான் அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜியாவுல் 1991 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து அதிகாரியானார். அவருக்கு ஜனாதிபதி போலீஸ் பதக்கம் மற்றும் வங்காள தேச போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேசத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து அவர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்றார். அப்பொழுது டாக்கா விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். பின்பு கண்ட்டோன்மென்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உளவு அமைப்பின் இயக்குனராகவும் பதவி வகித்தார். இவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.