வங்கதேசம் - பங்காபஜார் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து

April 4, 2023

வங்கதேசத்தின் மிகப்பெரிய ஜவுளி சந்தையாக பங்காபஜார் அறியப்படுகிறது, தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள இந்த சந்தையில், இன்று காலை 6:10 மணியளவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினரின் 47 குழுவினர் போராடி வருகின்றனர். இதுவரையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், தீ விபத்து நேர்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து பேசிய ஊடகவியலாளர் ஒருவர், விபத்து குறித்த செய்தி கிடைத்த 2 நிமிடங்களில், தீயணைப்புத் துறையினரின் முதல் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக […]

வங்கதேசத்தின் மிகப்பெரிய ஜவுளி சந்தையாக பங்காபஜார் அறியப்படுகிறது, தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள இந்த சந்தையில், இன்று காலை 6:10 மணியளவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினரின் 47 குழுவினர் போராடி வருகின்றனர். இதுவரையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், தீ விபத்து நேர்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதுகுறித்து பேசிய ஊடகவியலாளர் ஒருவர், விபத்து குறித்த செய்தி கிடைத்த 2 நிமிடங்களில், தீயணைப்புத் துறையினரின் முதல் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூறினார். மேலும், கடை முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று பொருட்களை வெளியேற்றுவதில் மும்முரமாக ஈடுபட துவங்கினர் என்றும், அதிகாலை நேரம் என்பதால், மக்கள் யாரும் இல்லை என்றும், கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu