1200 வங்காளதேச கைதிகள் இந்தியாவுக்குள் நுழையும் அபாயம்

August 10, 2024

வங்கதேச சிறைகளில் இருந்து தப்பியோடிய 1200 கைதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது. வங்கதேச சிறைகளில் இருந்து இதுவரை 1200 கைதிகள் தப்பித்துள்ளதாகவும் அவர்கள் ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கலாம் என்றும் வங்கதேச பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் வடக்கு மற்றும் தெற்கு எல்லை பகுதிகளில் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் […]

வங்கதேச சிறைகளில் இருந்து தப்பியோடிய 1200 கைதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.

வங்கதேச சிறைகளில் இருந்து இதுவரை 1200 கைதிகள் தப்பித்துள்ளதாகவும் அவர்கள் ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கலாம் என்றும் வங்கதேச பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் வடக்கு மற்றும் தெற்கு எல்லை பகுதிகளில் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள ஐந்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியுள்ளனர். நர்சிங்கி சிறையில் இருந்து தப்பித்த 400 கைதிகள் மீண்டும் சரண் அடைந்துள்ளனர். அதோடு காவல்துறை அதிகாரிகள் சிலரும் காணாமல் போய் உள்ளனர். அவர்களும் இந்திய எல்லைக்குள் தஞ்சம் புகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu