வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று, ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 994 பேர் புதியதாக டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,173 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 407 ஆக பதிவாகி, அந்நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.