வங்காளதேச முன்னாள் பிரதமர் ஜியா ஊழல் வழக்கில் விடுதலை

November 28, 2024

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். வங்காளதேச பிரதமர் கலிதா ஜியா உள்பட 4 பேர் மீது 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டில், டாக்கா நீதிமன்றம் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதி, முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு கலிதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, கலிதா ஜியாவின் 7 ஆண்டுகள் […]

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.

வங்காளதேச பிரதமர் கலிதா ஜியா உள்பட 4 பேர் மீது 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டில், டாக்கா நீதிமன்றம் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதி, முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு கலிதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, கலிதா ஜியாவின் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை டாக்கா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், ஊழல் வழக்கில் இருந்து கலிதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu