வங்கதேசம், ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்க உள்ளது என இடைக்கால அரசு ஆலோசகர் நேற்று தெரிவித்தார்.
தீஸ்தா ஆறு, கிழக்கு இமய மலைத்தொடரில் உருவாகி, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் வழியே வங்கதேசத்திற்குப் போகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்ள 2011-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட இருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தின் நீர் பற்றாக்குறையை காரணமாக முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் நீா்வளத் துறை ஆலோசகா் சயீதா ரிஸ்வானா ஹாசன், “பகிரப்பட்ட ஆறுகளில் வங்கதேசத்தின் நீர் பங்கு” என்ற கருத்தரங்கில், பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு, பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இந்த விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.