வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது அவர் லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் ஒருவர் இங்கிலாந்தில் தற்காலிக தஞ்சம் கோர முடியாது, அடைக்கலம் கேட்கவும் முடியாது. இங்கிலாந்து பிரதமர் கேயர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு கூறியிருப்பதாவது, அடைக்கலம் கேட்கும் தனிநபர்கள் அவர்கள் எந்த நாட்டிற்கு முதலாவதாக செல்கிறாரோ அங்கு அதை செய்ய வேண்டும். இங்கிலாந்துக்கு அடைக்கலம் அல்லது தஞ்சம் அளிப்பதற்கான வசதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த அடைக்கலம் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.