வங்காளதேச வன்முறையில் பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் இப்பொழுது போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் கிரானைட் போலீசார் வீசி வருகின்றனர். அங்கு ஆளும் ஹசீனா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே அங்கு வசிக்கும் 15 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதோடு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர் என்று இந்திய அரசு கூறியுள்ளது.