ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்காளதேசத்தில் 30% இடஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வங்காளதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களும், அவர் அமைச்சரகத்தில் இருந்த முன்னாள் எம்.பி.க்களுக்கான பாஸ்போர்ட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.