வங்காளதேசத்தில் இடைக்கால அரசு இன்டர்போலின் உதவியை நாடி, ஷேக் ஹசீனா நாடு திரும்ப ஏற்பாடு செய்து வருகிறது.
வங்காளதேசத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக்கவேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதனால் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக்கி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவரை நாடு திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள், முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக, ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எதிரான விரைவான நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, இடைக்கால அரசு இன்டர்போலின் உதவியை நாடி, உலகமெங்கும் தப்பியோடியவர்களை நாடு திரும்ப அழைத்துவரும் முயற்சியில் உள்ளது.