அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் என்ற கடன்களுக்காக வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்து வருகின்றன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல வங்கிகள் தனிநபர் கடன், காருக்கான கடன்களின் வட்டி தொகையை அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னதாக பாரத ஸ்டேட் பாங்க் காருக்கான கடன் வட்டி சதவீதம் 8.65 -லிருந்து 8.85 சதவீதமாக உயர்த்தியது. அதனை தொடர்ந்து பரோடா வாங்கி 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாகவும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி 8.75 சதவீதத்திலிருந்து 9.15 சதவீதமாகவும் மாற்றியுள்ளது. மேலும் ஐடிஎப்சி வங்கி முதன்முதலாக வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதன்படி தனி நபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.49 இல் இருந்து 10.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கர்நாடகா வங்கியில் 14.21 சதவீதத்தில் இருந்து 14.28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது ரெப்போ வட்டி விகிதத்தின்படி வீட்டுக்கு கடனுக்காக வட்டி தொகையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை.அதனால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மாறாமல் உள்ளது.