பிரிட்டனின் பிரபல முதலீட்டு வங்கி நிறுவனம் பார்க்ளேஸ் ஆகும். இந்த நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 10 பில்லியன் யூரோக்களை திருப்பி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பார்க்ளேஸ் வங்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வெங்கடகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். அவர் அடுத்த சில வருடங்களில் நிறுவனத்தின் மதிப்பை 12% உயர்த்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, செலவுகளை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூன்றாண்டு கால திட்டம் வகுக்கப்பட்டு, வங்கி செயல்பாடுகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. வரும் 2026 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவுகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், வங்கியின் முக்கிய பங்குதாரர்களுக்கு 10 பில்லியன் யூரோக்கள் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.